திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நேமம் பகுதியில் சாலையில் தாழ்வாக மின் கம்பி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நேமம் பகுதி சாலை வழியாக பல்வேறு கிராமங்களுக்கு பொது மக்கள் வெளியூர் சென்று வருகின்றனர். மேலும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் சென்று வருகிறது. தற்போது அதிகமாக வாகனங்களில் வைக்கோல் ஏற்றி செல்கிறது. மேலும் திருத்துறைப்பூண்டியிலிருந்து ஆட்டூர், எழிலூர், நேமம் இளநகர், வங்கநகர், ஓவரூர், வெள்ளக்கால் பகுதிக்கு இரண்டு மினி பேருந்துகள் அடிக்கடி சென்று வருகிறது. மின்கம்பி தாழ்வாக செல்லும் நேமம் பகுதியை கடந்து வந்த பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைகின்றனர்.