கொரோனா வைரஸ் பாதிப்பு பாலக்காட்டில் தியேட்டர்கள் மூடல்

பாலக்காடு :  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரள மாநிலத்திலுள்ள அரசு  மற்றும் தனியார் தியேட்டர்கள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா அணிக்கோடு சந்திப்பிலுள்ள கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக்கழகம் சார்பில் செயல்படும் இரண்டு தியேட்டர்கள்,  25க்கும் மேற்பட்ட தனியார் தியேட்டர்கள் கொரோனா வைரஸ் பீதியால் மூடப்பட்டுள்ளது. மேலும், பாலக்காடு மாவட்டத்திலுள்ள மலம்புழா அணை பூங்கா, திப்புசுல்தான் கோட்டை, காஞ்ஞிரப்புழா அணை, மங்கலம் அணை பூங்கா, போத்துண்டி அணை ஆகிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.  

 மேலும் திருமண நிகழ்ச்சிகள் எளியமுறையில் நடத்த வேண்டும், கோயில் திருவிழாக்கள் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது. அங்கன்வாடி, 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நேற்று முன்தினம் முதல் பள்ளிகள் செயல்படுகிறது. கல்லூரி தேர்வுகள் வழக்கம்போல் நடந்து வருகிறது.

Related Stories: