சென்னை: இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சென்னையை சேர்ந்த சாப்டீன் (66) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் இலங்கை சென்றுவிட்டு வந்திருந்தார். அவர் தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார். சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் அவரது ஆடைகளை கலைந்து சோதனை நடத்தினர். அவருடைய உள்ளாடை மற்றும் இடுப்பைச் சுற்று சிறு சிறு பைகளை கட்டிவைத்திருந்தார். அதை வெளியில் எடுத்து பிரித்துப் பார்த்தனர். அதில் கலர் கலராக மோதிரங்கள், செயின்கள், போலி வைரக்கற்கள் ஏராளமாக மின்னிக் கொண்டிருந்தன. அதன் எடை 3 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு 31.5 லட்சம். சுங்க அதிகாரிகள் அவரை கைதுசெய்து போலி வைரகற்களை பறிமுதல் செய்தனர். இதை எதற்காக எடுத்து வருகிறார். யாரிடமாவது இதை உண்மையான வைரக் கற்கள் என்று கூறி ஏமாற்ற்ரி விற்பதற்கா என கேட்டபோது அவர் இலங்கையில் ஒருவர் இது சாதாரண கண்ணாடி கற்கள் தான் இதை எடுத்துச் செல்லுங்கள் சென்னை விமான நிலையத்தில் உங்களை பிடிக்கமாட்டார்கள்.