ஈரானில் தவிக்கும் மீனவரை மீட்ககோரி உண்ணாவிரதம்

நாகர்கோவில்: ஈரானில் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் உட்பட 700 பேர், கொரோனா வைரஸ் காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை உடனே இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள்பாதை அமைப்பு சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. பேராட்டத்தில்பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் பங்கேற்றனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வசந்தகுமார் எம்பி மீனவர்களை மீட்டு வர முயற்சி நடந்து வருகிறது. விரைவில் அனைவரும் தனி விமானத்தில் நலமுடன் இந்தியா திரும்புவார்கள் என்று தொலைபேசியில் தெரிவித்தார்.

Related Stories: