தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை : தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இவ்வாறு பதில் அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அது மத்திய சட்டத்தை கட்டுப்படுத்தாது என்றும் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து மாநில சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால் அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறினார்.

Related Stories: