நெல்லை: நெல்லையில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் ஆதரவாளரை போலீசார் நேற்று கைது செய்தனர். நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். முதுநிலை பட்டதாரியான இவர், சில மாதங்களாக மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடி மற்றும் நாட்டுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தார். இதை கண்டறிந்த மத்திய உளவுத்துறை, பிரேம் குமாருக்கு அறிவுரை கூறுமாறு போலீஸ் அதிகாரி மற்றும் க்யூ பிரிவு உயரதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியது. போலீசார் எச்சரித்தும், அரசுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.