உல்லாசத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்: காதலியின் ஆபாச வீடியோவை பகிர்ந்த வங்கி ஊழியர் கைது


ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் சிவா(35). தனியார் வங்கி ஊழியர். இவர், கடன் தொகையை வசூலிக்க சென்ற போது ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மருங்காலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 39 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. அந்த பெண்ணின் கணவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சிவாவுக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அந்த பெண்ணை சிவா வழக்கம்போல உல்லாசத்துக்கு அழைத்தபோது மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவா, ஏற்கனவே அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோவை தனது நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். அவரது நண்பர்களில் ஒருவர் இந்த வீடியோவை சென்னையில் உள்ள அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பி விட்டார். இதைக்கண்ட அந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தனியார் வங்கி ஊழியர் சிவாவை இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post உல்லாசத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்: காதலியின் ஆபாச வீடியோவை பகிர்ந்த வங்கி ஊழியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: