தண்டையார்பேட்டை: வடசென்னையில் உள்ள ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சாலையில் நடந்து செல்பவர்கள், பைக்கில் செல்பவர்களை மறித்து, ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டது. கடந்த 8ம் தேதி ராயபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் சாலமன், சந்தோஷ், அசோக்குமார் ஆகியோர் பானிபூரி சாப்பிட்டுகொண்டு இருந்தபோது பைக்கில் வந்த 2 பேர் அரிவாளால் வெட்டி அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்து சென்றனர். இதேபோல் வண்ணாரப்பேட்டை, சிமின்ட்ரி சாலையில் வாக்கிங் சென்ற டேவிட் ராஜ் என்பவரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள், அவரின் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்த புகார்களின் பேரில், ராயபுரம் உதவி ஆணையர் தினகரன் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடிவந்தனர்.