தர்மசாலா: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக டெல்லி வந்தது. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் வருகிற 12ம் தேதி தொடங்க உள்ளதால், கேப்டன் குயின்டான் டி காக் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி தர்மசாலா சென்றது. 2வது ஒருநாள் போட்டி லக்னோவில் 15ம் தேதியும், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் 18ம் தேதியும் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தென்னாப்பிரிக்க அணியினருடன் டாக்டர் சுயப் மஞ்ச்ரா தலைமையிலான டாக்டர்கள் குழுவும் வந்துள்ளது. இதுகுறித்து, அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறுகையில், ‘‘அணியின் மருத்துவர் சொல்லும் அறிவுரையின்படி நாங்கள் செயல்படுவோம்.