புதுடெல்லி: முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், ஒரு பெண் தேயிலை இலைகளை பறிக்கும் படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து, ‘இந்திய பெண்கள் மிகவும் உற்சாகமடைய செய்கின்றனர்’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கு, ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெளிட்ட பதிவில், ‘பீட்டர்சன் தற்போது ஒரு ஆவணப்படத்தின் படப்பிடிப்புக்காக இந்தியாவில் இருக்கிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார்.