புதுடெல்லி: தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு அமைப்பு முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளம், நிலநடுக்கம் போன்ற ஆபத்துக்கள் ஏற்படும்போது அது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது பேரிடர் மேலாண்மை எனப்படும். அவசர காலங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு அமைப்பு (என்பிடிஆர்ஆர்) உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அமைப்பை மத்திய அரசு நேற்று முழுமையாக மாற்றி அமைத்துள்ளது. இந்த அமைப்பின் புதிய தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.