அண்ணாநகர்: கோயம்பேடு தொழிலாளி கொலையில் முக்கிய குற்றுவாளி நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கோயம்பேடு நியூ காலனியை சேர்ந்தவர் ஜெய்குமார் (24). இவரது நண்பர் மதுரையை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர் (44). இவர்கள் இருவரும் கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் அமர்ந்து, கஞ்சா அடிப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த மாதம் ஜெய்குமார் தனது தாய் செல்போன் எண்ணை சேகரிடம் கொடுத்து, ‘‘உனக்கு கஞ்சா வேண்டுமென்றால், இந்த எண்ணில் கூப்பிடு. கொண்டு வந்து தருகிறேன்,’’ என கூறியுள்ளார். அந்த எண்ணில் தொடர்புகொண்ட சேகர், ஜெயக்குமாரின் தாயாரிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த ஜெயக்குமார், சேகரை கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி ஜெய்குமார், தனது மற்ெறாரு நண்பர் திருமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் (24) என்பவருடன் கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ், கூவம் நதி அருகே கஞ்சா அடித்துள்ளார்.