கோவை பேரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தர வந்த வாலிபருக்கு பளார் விட்ட பெண் ஏட்டு: இடமாற்றம் செய்து எஸ்பி நடவடிக்கை

கோவை: கோவை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தர வந்த வாலிபரை பெண் போலீஸ் ஏட்டு பளார் என அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கோவை புறநகர் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டு கிருஷ்ணவேணி பணிபுரிகிறார். இவர், புகார் மனு கொடுக்க வருவோரிடம் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் அடாவடி செய்வதாகவும் புகார் வெளியாகியுள்ளது. அவரது செயல்கள் எல்லாம், சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிலர், கோவை புறநகர் எஸ்பி. சுஜித்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில், பெண் தலைமை காவலர் கிருஷ்ணவேணி லஞ்சம் கொடுக்க மறுக்கும் புகார்தாரரை கைநீட்டி அடிக்கும் அளவுக்கு அராஜம் செய்கிறார். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என கூறியுள்ளனர். இடமாற்றம்: இந்த புகாரையடுத்து, ஏட்டு கிருஷ்ணவேணி பேரூர் காவல் நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்துள்ளனர்.

Related Stories: