கோவை: கோவை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தர வந்த வாலிபரை பெண் போலீஸ் ஏட்டு பளார் என அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கோவை புறநகர் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டு கிருஷ்ணவேணி பணிபுரிகிறார். இவர், புகார் மனு கொடுக்க வருவோரிடம் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் அடாவடி செய்வதாகவும் புகார் வெளியாகியுள்ளது. அவரது செயல்கள் எல்லாம், சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.