பெங்களூரு: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்சி - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான அரையிறுதியின் முதலாவது சுற்று பெங்களூருவில் நேற்றிரவு நடந்தது. இந்த ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் டேவிட் வில்லியம்ஸ் பந்தை வலைக்குள் அனுப்பிய நேரத்தில், சக வீரரிடம் இருந்து பந்தை பெற்ற போது கையால் கையாண்டது தெரியவந்ததால், இதை கோல் இல்லை என்று நடுவர் அறிவித்தார். அதன்பின், 31வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் டேஷோர்ன் பிரவுன் கோல் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். 80வது நிமிடத்தில் பெங்களூரு கேப்டன் சுனில் சேத்ரிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் முடியவில்லை.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கொல்கத்தாவை வீழ்த்திய பெங்களூரு: பனியனை பிடித்து இழுத்ததால் சிவப்பு அட்டை
- பெங்களூரு
- தொடர் பெங்களூரு
- ஐ.எஸ்.எல் கால்பந்து
- கொல்கத்தா
- ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்