டெல்லி: விமானங்களில் பயணிகளுக்காக வைஃபை வசதி அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இயங்கும் விமானங்களில் செல்லும் பயணிகளுக்காக விமானத்திலேயே வைஃபை வசதிகளைச் செய்துதர விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. செல்போன் இன்று அத்தியாவசியத் தேவையாகியுள்ள நிலையில் வெளியூர் செல்லும் மக்களுக்காக ரயில் நிலையங்களில் மட்டுமின்றி ரயில்களிலும் வைஃபை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. சில ஆம்னி பேருந்துகளிலும்கூட வைஃபை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகளுக்காக விமானங்களிலும் வைஃபை வசதி செய்து தர, விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.