கொல்கத்தா: கர்நாடகா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரை இறுதியில் பெங்கால் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற கர்நாடகா பந்துவீசியது. பெங்கால் முதல் இன்னிங்சில் 312 ரன் குவித்து ஆல் அவுட்டானது (92 ஓவர்). மஜும்தார் ஆட்டமிழக்காமல் 149 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய கர்நாடகா முதல் இன்னிங்சில் 122 ரன்னுக்கு சுருண்டது. கே.எல்.ராகுல் 26, கிருஷ்ணப்பா கவுதம் 31, அபிமன்யு மிதுன் 24 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். பெங்கால் பந்துவீச்சில் இஷான் போரெல் 5, ஆகாஷ் தீப் 3, முகேஷ் 2 விக்கெட் வீழ்த்தினர்.