ஈரோடு: இலங்கை அகதியிடம் குடிபெயர்தல் சான்று வழங்க ரூ.300 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் அரச்சலூர் திருவள்ளூவர் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இலங்கை அகதி. இவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் ஊட்டி அகதிகள் முகாமில் இருந்து அரச்சலூர் குடிபெயர்ந்து வந்தனர். அவர்களுக்கான குடிபெயர்தல் சான்று பெற மகாலிங்கம், அரச்சலூர் உள் வட்ட வருவாய் அலுவலகத்தில் கடந்த 2008ல் விண்ணப்பித்தார்.