திங்கள்சந்தை: குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக மர்ம காய்ச்சல் மற்றும் கண் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறையும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களிலும், வர்த்தக நிறுவனங்களின் முன்பும் குப்பைகள் குவித்து வைக்கப்படுகின்றன. இதனால் கடும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வில்லுக்குறி-மாந்தோப்பு சாலை, மாடத்தட்டுவிளை - அந்திக்கடை சாலை மற்றும் சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.