குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே விவசாய தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். கரூர் மாவட்டம் திருமலைராயபுரத்தை சேர்ந்தவர் ராஜா (37). விவசாயி. குஜிலியம்பாறையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் உள்ள இவ்வூரில் இவருக்கு சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது. இங்கு சுமார் 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. தோட்டத்தில் தான் வளர்த்து வந்த பசு மாட்டை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது.