திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஸ்ரீராம் சாரிஸ் பட்டுசேலை நிறுவனத்தில் 2வது நாளாக வருமானவரி அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ரீராம் சாரிஸ் உரிமையாளர் குணசேகரன் வீடு உள்ளிட்ட 16 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.