பெங்களூரு: திருமண பத்திரிகையில் வைத்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்படவிருந்த 5 கிலோ போதை பொருட்கள் பெங்களூர் விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது. சுமார் 5 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். போதைப் பொருள் கடத்தல் என்பது இன்றைக்கு மிகச் சாதரணமான ஒன்றாகிவிட்டது. குறிப்பிட்ட வயதுக்காரர்கள் தான் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவார்கள் என்பதெல்லாம் கிடையாது, பள்ளிக் குழந்தைகள் கூட மிக எளிதாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார்கள். போதை பொருட்களை தடுக்க அரசாங்கம் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் தற்போது வரை கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன. தொடர்ந்து, திருமண பத்திரிகையில் வைத்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்படவிருந்த போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பெங்களூரு விமான நிலைய சரக பிரிவில் இருந்து வெளிநாட்டுக்கு விமானம் மூலம் பெருமளவில் போதை பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.