குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை பகுதியில் சீசனுக்காக முருங்கை மரங்களில் ஏப்ரல், மே மாதங்களில் முருங்கை சீசன் அறுவடைக்கு அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளது. குஜிலியம்பாறை, ஆர்.வெள்ளோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி முக்கிய வேளாண் தொழிலாகும். மிகுந்த வருவாய் தரும் பணப் பயிராகவும் உள்ளது. ஆர்.வெள்ளோடு பகுதி முருங்கை காய் இதன் சுவை மற்றும் காயின் திரட்சியின் காரணமாக தமிழகம் அல்லாது அண்டை மாநிலத்திலும் கூட பிரசித்தி பெற்றது. குறிப்பாக கூம்பூர், ஆர்.புதுக்கோட்டை, மல்லப்புரம், பல்லாநத்தம், ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம், குஜிலியம்பாறை, ஆர்.கோம்பை, வடுகம்பாடி, உல்லியக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமபுறங்களில் பல ஏக்கர் பரப்பளவில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. செடி முருங்கை, நாட்டு முருங்கை, கரும்பு முருங்கை என பயிரிட்டுள்ளனர்.