காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் - அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகளுக்கு இடையே ஒரு வார காலம் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொள்ளபட்டுள்ளது. இதனால் அங்கு அமைதி நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்திய அல்-கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனையும், அவர்களுக்கு ஆதரவளித்த தலிபான்களையும் ஒடுக்க அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தானில் கடந்த 2001ல் இறங்கியது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தலிபான்களை, ஆப்கன் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வைக்கும் முயற்சிகளை சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா மேற்கொண்டது. ஆனால், அவ்வப்போது தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி இந்த பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்தினர்.