பொள்ளாச்சி: பொள்ளாச்சியை சேர்ந்தவர் டெய்லர் விஸ்வநாதன் (90), இவர் கடந்த 2010ம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஜிப்பாவை பரிசாக அனுப்பினார். இதையடுத்து கடந்த 2014ல் பிரதமராக பதிவேற்ற நரேந்திர மோடிக்கும், கதர் ஜிப்பா தைத்து தபால் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைத்தார். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்களுக்கும் தனது கையாலே ஜிப்பா தைத்து அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், வரும் 24ம் தேதி இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வெள்ளை நிற கதர் ஜிப்பா பரிசாக அனுப்ப டெய்லர் விஸ்வநாதன் முடிவு செய்துள்ளார். அந்த ஜிப்பாவை, 2 நாட்களுக்கு முன்பாகவே தைத்து வைத்துள்ளார். அதனை, அமெரிக்க தூதரகத்துக்கு பதிவு தபால் மூலம் அனுப்ப திட்டமிட்டுள்ளார்.