சேலம்: சேலம் அருகே சென்னை புறவழிச்சாலையில் வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. கரூரிலிருந்து சென்னை புறவழிச்சாலையில் சேலம் வழியாக சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்தது. அதவாது, வண்டியின் இன்ஜின் பகுதியில் புகை வருவதை கண்ட ஓட்டுநர் உடனடியாக சுதாரித்து வேனை சாலையோரம் நிறுத்தியுள்ளார். பின்னர் தீ வேகமாக பரவியதால் ஓட்டுநர் மகேஷ் வேனிலிருந்து இறங்கி ஓடியுள்ளார். அப்போது, ஓட்டுனருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இதன்தொடர்ச்சியாக, வேன் முற்றிலுமாக எரிந்து தீக்கிரையானது.