கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே புகார் கூறிய இளம்பெண்ணின் சகோதரன் தாக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ இதில் முகாந்திரம் இல்லை என நிராகரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.