டெல்லி: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் திமுக கோரியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்களில் இருக்கட்டங்களாக 27 மாவட்டங்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு விரைவிலே இந்த உள்ளாட்சி தேர்தலானது நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருந்த தருணத்தில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை வெகுவிரைவில் நடத்த கூறி திமுக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.