அரியலூர்: திருமானூர் பகுதி நெடுஞ்சாலைகளில், வர்ணம்பூசுதல், சாலை யோரங்களில் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரியலூர் நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தின் சார்பில், கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் அறிவுரைப்படி, திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பழூர் - புள்ளம்பாடி - திருமழபாடிசாலை, திருமானூர் - பழையபடிசாலை, அரண்மனைக்குறிச்சி - இலந்தை கூடம் சாலை, கீழக்காவட்டாங்குறிச்சி - வெங்கனூர் சாலை மற்றும் இதர சாலைகளில் விபத்துகள் ஏற்படாமல் வாகன ஓட்டிகள் பயணிக்கும் வகையில், சாலை ஓரங்களில் உள்ள மரங்களுக்கு வர்ணம் பூசுதல் மற்றும் எண்கள் எழுதுதல், பாலங்களில் உள்ள தடுப்பு கட்டைகளுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணி நடைபெறுகிறது.