துபாயில் கட்டிடத்தில் இருந்து கேரள வாலிபர் விழுந்து பலி

துபாய்; துபாயில் பணிபுரியும் இடம் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து கேரள இன்ஜினியர் பலியானார்.  கேரளாவின் திரூர் பகுதியை சேர்ந்தவர் சபீல் ரஹ்மான். இவருடன் பிறந்தவர்கள் 4 பேர். கடைக்குட்டியான சபீல், கடந்த 2018ம் ஆண்டு முதல் துபாயில் உள்ள எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர், சிலிகான் ஓயாஸ் பகுதியில் தான் பணியாற்றும்  நிறுவனம் அருகேயுள்ள கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்த  கிடந்தார். அவர் அந்த கட்டிடத்திற்கு எதற்கு சென்றார் என்று தெரியவில்லை. இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: