சென்னை: டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி ஐ.ஆர்.சி.டி.சி., இணையம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக சிலர் டிக்கெட் முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், தெற்கு ரயில்வேயில் உள்ள 6 கோட்டத்திலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையில் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்து டிக்கெட் முன்பதிவு செய்யும் 39 பேர், ஐ.ஆர்.சி.டி.சி இணையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.