பீஜிங்: ஹாங்காங்விவகாரத்தை கவனிக்கும் துறைக்கு சீன அரசு புதிய இயக்குனரை நியமித்துள்ளது. ஹாங்காங்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரணை நடத்துவதற்கு வகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளடைவில் இந்த போராட்டமானது, சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெறுவதற்கான ஜனநாயக சுதந்திர போராட்டமாக மாறியது. இந்த தொடர் போராட்டங்கள் காரணமாக ஹாங்காங்கில் அசாதாரண சூழ்நிலை நிலவி வந்தது. கோவிட் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஹாங்காங் மக்களுக்கு போதுமான அளவுக்கு முகக் கவசங்கள் கிடைக்கவில்லை. இதனால், போராட்டங்கள் குறைந்துள்ளன.