நெல்லை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மேற்பார்வையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என அப்பாவு வலியுறுத்தியுள்ளார். மேலும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்த தவறுகளை தட்டிக்கேட்போமே தவிர தவறுக்கு ஒருபோதும் துணை போனது கிடையாது என அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லையில் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு மற்றும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர். அப்போது மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். அப்போது பேசிய அப்பாவு, அமைச்சர் ஜெயக்குமார் கூறிய புகாருக்கு மறுப்பு தெரிவித்தார். டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என கேள்வி எழுப்பிய அவர், ஐகோர்ட் நீதிபதிகள் மேற்பார்வையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.