குளித்தலை: குளித்தலை கடம்பர் கோயில் எதிரே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1926ம் ஆண்டு தென்கரை வாய்க்காலில் சிறிய பாலம் கட்டப்பட்டு இருந்தது. சில வருடங்களுக்கு முன் குளித்தலை-முசிறி பெரியார் பாலம் கட்டுமான பணி நடைபெற்றபோது இந்த பழமையான பாலத்தின் வழியாக தான் அனைத்து பொருட்களும் எடுத்துச்சென்று பாலம் கட்டப்பட்டது.சமீபத்தில் திருச்சி-கரூர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதால் திண்டுக்கல், மதுரை, மணப்பாறை, கடவூர், தரகம்பட்டி, பஞ்சப்பட்டி, அய்யர்மலை, தோகமலை, உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வரும் வாகனங்கள் புறவழிச்சாலை செல்ல வேண்டுமென்றால், இந்த கடம்பூர் கோவில் வழியாக செல்லும் தென்கரை வாய்க்கால் பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது. மேலும், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இவ்வழியாகதான் வந்து செல்கின்றனர். மேலும் திருச்சி மற்றும் கரூரிலிருந்து வரும் வாகனங்கள் குளித்தலை வழியாக வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த பாலத்தைதான் பயன்படுத்த வேண்டி உள்ளது. அதனால் தினந்தோறும் இப்பாலத்தின் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
குளித்தலை கடம்பர் கோயில் எதிரே ஆங்கிலேயர் கால பழமையான பாலம் பொலிவு பெறுமா?: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
- பாலம்
- ஆங்கிலம்
- பழைய பாலம் நன்றாகிறது
- சரிவு
- பிரிட்டிஷ் பாலம்
- மோட்டாரிஸ்டுகள்
- குடம்பலை கடம்பர் கோயில்