கரூர்: கரூர்-திருச்சி சாலையில் ஆபத்தான முறையில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்வது குறித்து பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-திண்டுக்கல் சாலையில் வெங்ககல்பட்டி பகுதிக்கு முன்னதாக, கரூர் திருச்சி பைபாஸ் சாலை குறுக்கிடுகிறது. இதனால், இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கரூர், வெள்ளியணை போன்ற பகுதிகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் மேம்பாலத்தின் கீழ்பகுதியை கடந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஏற்பட்ட விபத்து முதியவர் ஒருவர் இறந்தார்.