திருமயம்: திருமயத்தில் இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டுக்கு வர மறுக்கும் அரசு பஸ் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் முறையிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி கூட்டம் தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இளஞ்சாவூர் முத்துமாரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா குறித்து வரும் 22ம் தேதி கூட்டம் நடத்தப்படும். திருமயம் ஊராட்சியில் நடைபெறும் தினசரி மகமையையும், ஊராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் விடுவது, ஏற்கனவே உள்ள கடைகளுக்கு வாடகை, வரி வசூல் செய்வதோடு ஆக்ரமிப்பு செய்து கடை வைத்திருப்பவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பி கால அவகாசம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.