உகாண்டா: பாகிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைப் பதம் பார்த்த பாலைவன வெட்டுக் கிளிகள் தற்போது உகாண்டாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த வாரம் திடீரென லோகஸ்ட் வகையைச் சேர்ந்த லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து பயிர்களை நாசம் செய்தன. இதையடுத்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் தற்போது வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. இதனை தொடர்ந்து, உகாண்டாவிலும் படையெடுத்த வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து, மேய்ச்சல் நிலங்களையும், பயிர்களையும் நாசம் செய்கின்றன.