அயர்லாந்து: ஐரோப்பிய நாடுகளில் வீசி வரும் சியாரா புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சியாரா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலின் காரணமாக வடக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ரயில்கள் மற்றும் விமானங்கள் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.