திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம், மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கும், ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 4 லட்டுகள் 70க்கு சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் முதல் சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்த லட்டுகளை முற்றிலும் ரத்து செய்த தேவஸ்தான நிர்வாகம், சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு மட்டும் இலவசமாக வழங்கி, கூடுதல் லட்டுகள் வேண்டுமென்றால் ஒரு லட்டு 50க்கு பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தது.இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு அதிரடி முடிவை தேவஸ்தானம் நிர்வாகம் எடுத்துள்ளது. அதன்படி, வாராந்திர மற்றும் தினந்தோறும் நடைபெறும் சிறப்பு சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் ரத்து: தேவஸ்தானம் முடிவு
- திருப்பதி எசுமலயன் கோயில்: தேவஸ்தானம் முடிவு
- யாத்ரீகர்களின்
- பக்தர்கள்
- திருப்பதி எசுமலயன் கோயில்
- ரத்து