பெரம்பூர்: திருமணத்திற்கு பெண் தராததால் இளம்பெண்ணின் தந்தையை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (48). இவரது மகளை வியாசர்பாடி, புது நகர் பகுதியை சேர்ந்த அஜய்குமார் (28) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜய்குமார் நேற்று முன்தினம் சக்திவேல் வீட்டிற்கு சென்று, ‘‘உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து தாருங்கள்’’ என்று கேட்டுள்ளார். அதற்கு சக்திவேல் மறுப்பு தெரிவித்து, ‘‘வீட்டை விட்டு வெளியே செல்’’ என கூறியுள்ளார்.