சென்னை: சென்னை அடையாறு நேரு யுவகேந்திரா இளைஞர் விடுதி அரங்கத்தில், மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 12வது தேசிய பழங்குடியின இளைஞர் பரிமாற்ற திட்ட முகாம் நிறைவு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று, கலந்துகொண்டு சிறந்த பழங்குடியின இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் புறக்கணிக்க முடியாததும், தவிர்க்க இயலாததும் ஆக விளங்குவதும் இளைஞர் சக்திதான். இளைஞர்களை புறந்தள்ளும் எந்த ஒரு நாடும் முன்னேற்றம் கண்டதாகவோ, எழுச்சி பெற்றதாகவோ, இதுவரை சரித்திரமே கிடையாது.
தேசிய பழங்குடியின இளைஞர் பரிமாற்ற திட்ட முகாம் நிறைவு : துணை முதல்வர் சான்றிதழ் வழங்கினார்
- நிறைவு
- துணை முதலமைச்சர்
- தேசிய பழங்குடி இளைஞர் பரிமாற்ற திட்ட முகாம்
- தேசிய பழங்குடி இளைஞர் பரிமாற்ற திட்ட பிரச்சாரம்