வாஷிங்டன்: ‘ஏமனில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில், அல்-கய்தா தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் காசிம் அல்-ரெமி சுட்டுக் கொல்லப்பட்டான். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்-கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனாக அய்மன் அல்-ஜவஹிரி இருக்கிறார். இவருடைய துணைத் தளபதியாக இருந்தவன் அல்-ரிமி (46). இவன், கடந்த 1990ம் ஆண்டில் அல்-கய்தா அமைப்பில் சேர்ந்தான். பின்லேடனுக்காக ஆப்கானிஸ்தானில் பணியாற்றினான். பின்லேடனுக்குப் பிறகு ஏமன் சென்று தீவிரவாதத்தில் ஈடுபட்டான். இவனுடைய தலைக்கு அமெரிக்கா ரூ.75 கோடி பரிசுஅறிவித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அமெரிக்க கடற்படை விமான தளத்தில் கடந்த டிசம்பர் 6ம் தேதி துப்பாக்கிச்சூடு நடந்தது. ராணுவ பயிற்சிக்காக வந்த சவுதி விமானப்படை அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் அமெரிக்க கடற்படை மாலுமிகள் 3 பேர் பலியாயினர். இதையடுத்து, பயிற்சிக்கு வந்த சவுதி ராணுவத்தினர் 21 பேரும் திரும்ப அனுப்பப்பட்டனர்.