நீலகிரியில் சிறுவனை அழைத்து காலணியை கழற்ற வைத்த விவகாரம் : சிறுவனிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவிக்க முடிவு

நீலகிரி : நீலகிரி முதுமலையில் சிறுவனை அழைத்து காலணியை கழற்ற வைத்த விவகாரம் தொடர்பாக சிறுவனை நேரில் அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை 10 மணிக்கு உதகையில் உள்ள அரசு மாளிகையில் நேரில் அழைத்து வருத்தம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் குடும்பத்தினரை வனத்துறை அதிகாரிகள் நேரில் அழைத்து வருகின்றனர்.

Related Stories: