திருவொற்றியூர்: திருவொற்றியூரில் வெறிநாய் கடித்ததில் 8 பேர் படுகாயமடைந்தனர்.திருவொற்றியூர் சோமசுந்தரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இவை சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி கடிக்க முயல்வதால் பொதுமக்கள் பீதியுடன் செல்கின்றனர். இந்நிலையில் திருவொற்றியூர் கார்கில் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி அனுசுயா (18), நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சோமசுந்தரம் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வெறிநாய் ஒன்று அவரை விரட்டி கடித்தது. உடனடியாக அவர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.