தாய்லாந்து பெண் பலாத்காரம்; 2 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவின் கொண்டோட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது  இன்சாப், அன்சாரி. இதில் இன்சாப்புக்கு தாய்லாந்து நாட்டை சேர்ந்த 25 வயதான  இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த வருடம் அவர் மலப்புரத்துக்கு  சுற்றுலா வந்தபோது இன்சாபுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்   கடந்த 2 தினங்களுக்கு முன் இன்சாப் அழைப்பின்பேரில் அந்த பெண் கொச்சி வந்தார். அவரை ஓட்டலில்  அறை எடுத்து தங்க வைத்தனர். அங்கு இருவரும் சேர்ந்து  அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி எர்ணாகுளம்  மத்திய போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது  இன்சாப், அன்சாரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: