சிவகாசி: சிவகாசி அருகே புதர்மண்டிக் கிடக்கும் நீர்வரத்தை ஓடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் சாலைகள், நீர்வழிப்பாதைகள், ஓடைகளில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பெயரளவில் ஆக்கிரமி–்ப்பு எடுக்கப்பட்ட போதிலும் தற்போது அந்த நடவடிக்கையும் இல்லை. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவர்குளம் ஊராட்சியில் பல்வேறு நீர்வரத்து பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வெள்ளமாலை நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பிக்கப்பட்டு, புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால், இந்த நீர்வரத்து பாதையில் கழிவுநீர் தேங்கியுள்ளது.