பெய்ஜிங்: கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் தயாரிப்பில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் உற்பத்திக்கான முக்கிய கேந்திரமாக விளங்கும் சீனாவில், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மருந்துகள் மற்றும் உணவு பொருட்களை வாங்க குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் உற்பத்தி கடும் சரிவை சந்தித்துள்ளன. சீனாவில் முக்கிய நகரங்கள் பிப்ரவரி 9ம் தேதி வரை அடைக்கப்பட்டால் அங்கிருந்து இந்தியாவுக்கு செல்போன்கள் இறக்குமதி செய்வது 50 சதவீதம் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் உற்பத்தி 20 சதவீதம் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.