சேலம் : சேலத்தில் 2 நாட்களில் நடந்துள்ள 2 கொலைகளும் ஒரே மாதிரியாக இருப்பதால் கொலையாளி சைக்கோவா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் வணிக வளாகத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை இளைஞர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. டிப் - டாப் ஆக ஆடை அணிந்து வந்த இளைஞன், சுற்றி முற்றும் நோட்டமிட்டு கொலையை அரங்கேற்றுவது அதில் பதிவாகி உள்ளது.