ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் சாலை ஓரங்களில் குவியல் குவியலாக கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் சாலை ஓரங்களில் தோல், இறைச்சி கழிவுகள் போன்ற குப்பைகளை குவியல், குவியலாக கொட்டுகின்றனர்.