தஞ்சாவூர்: தஞ்சை பெருவுடையார் கோயிலில் வருகின்ற 5-ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று 2ம் நாளாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை பெரிய கோயிலில் 12 இடங்களில் அதிநவீன ஸ்கேனர் கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழாவில் கோவிலுக்குள், முக்கிய நபர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.