மார்ச் 14ம் தேதி ஐஎஸ்எல் பைனல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நடப்பு சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. கடைசி லீக் போட்டி பிப்.25ம்  தேதி நடக்கிறது. இந்நிலையில் அரையிறுதி, இறுதிப்போட்டிகள் நடைபெறும் தேதிகளை ஐஎஸ்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி அரையிறுதி போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் பிப்.29, மார்ச் 1 ஆகிய தேதிகளிலும், 2வது சுற்று ஆட்டங்கள் மார்ச் 7, 8 தேதிகளிலும் நடைபெறும். இறுதிப் போட்டி மார்ச் 14ம் தேதி நடக்கும். அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை பொறுத்து போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்படும். போட்டிகள் அனைத்தும் வழக்கம் போல் இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

Related Stories: